Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ரட்சித்துக் கொல்லும் ராட்சஷனே 39

 
அவன் கை ஆடைகளை தாண்டி உள்ளே நுழைய முயன்றது.
"சரண் ப்ளீஸ் சரண் என்னை விட்டுடுங்க. என்னால கூச்சம் தாங்கவே முடியல."
"ஓஹோ? மேடம் கேட்டவுடனே விட்டுடனுமா? அது எப்படி விட முடியும்... என்ன மட்டும் எவ்வளவு நேரம் நீ தவிக்க வச்ச..."
"அதுக்காக உங்க கால்ல வேணாலும் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க..."
"அதெல்லாம் முடியாது. கொஞ்ச நேரம் நீ என் கூட நின்னு தான் ஆகணும்."
"ரொம்ப மோசம் நீங்க, இன்னைக்கு ராத்திரியும் உங்கள வெளியில வச்சு கதவ பூட்டுறேனா இல்லையான்னு பாருங்க."
"இன்னொரு வாட்டி செய்யணுங்கிற ஐடியா வேற இருக்குதா உனக்கு? தப்பாச்சே. இப்ப பாரு, உன்னை என்ன பண்றேன்னு..." அவளை கீழே தள்ளி விடுவது போல் கையை விட்டான்.
நிற்க கூட திடனில்லாத களிமண்ணில், கால் வழுக்க நின்று கொண்டிருந்த அவளைப் பிடித்து கீழே தள்ளி விட்டால் என்ன செய்வாள்...
"ஐயோ அம்மா..."
விழப்போகும் நேரம் பிடித்துக் கொண்டான்.
 
 
May be an image of 2 people and text that says 'ரட்சித்துக் கொல்லும் ராட்சஷனே...!'